Saturday, May 16, 2020

காதல் என்னும் அத்தியாயம் 5:

அவள் என் தலையில் கொட்டிய போது கைகளில் இருந்த வளையல் சத்தம் கொலுசின் ஓசைக்கு கோரஸாய் சேர்ந்துகொண்டது. மாலை நேர இளம் தென்றல், அருகிலே ஒளிவீசும் மின்னல், அதை நினைக்கும் போதே நான் பறக்கிறேன் விண்ணில், ஆஹா இன்னும் என்னென்ன அதிசயங்களோ பெண்ணில், இவை யாவும் எண்ணங்களால் எண்ணில் இனிக்குது நெஞ்சில்.
இவ்வாறு என் மனம் சேராத வார்த்தைகளை சேர்த்து, கோராத மாலைகளாய் கோர்த்து தீராத ஆசைகளை தீர்த்துக் கொண்டிருக்க அவள் பூ கரம் இல்லை, இல்லை பொன் கரம் என் கரத்திலிருந்து விருப்பின்றி விடைபெற்றது.
என் அக கேமராவில் அவளை அனிமேஷன் செய்து கொண்டிருந்த நான் இதை கவனிக்க தவறினேன். மீண்டும் அவளுடைய பொன் கரங்கள் என் தோளைப் பற்றி சிறிது இழுக்க 3d எபெக்ட் இல் இருந்த நான் இயல்பு நிலைக்கு திரும்பினேன்.
அவள் என்னை பார்த்தால் உனக்கு பேய் மாதிரி தெரிகிறதா? வேட்டைய புர அரண்மனைக்கு சென்று வந்த வடிவேலை போல, இப்படி உறைந்து போய் நின்று கொண்டு இருக்கிறாய் என்றாள்.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை வாயாடி மேலே எதற்கு வந்தாய் என்று தெரிந்து கொள்ளலாமா? என்றேன் நான். உடனே அவள் ஒரு அழகான பையன் வந்திருப்பதாகவும், அவன் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். அதான் பார்த்துட்டு போலாம் என்று வந்தேன் என்றாள்.
அவள் பேச்சில் அப்படியே கிராமத்து துடுக்கு அதை நான் ரசித்தாலும் பார்த்தாச்சு இல்ல போகலாம் என்றேன். போவாங்க, போவாங்க இந்தாங்க காப்பி என்றால். நான் எப்படி வாங்குவது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன். அவள் என் கைகளைப் பிடித்து இந்தா பத்திரமாக பிடி என்று கொடுத்தாள். நான் வாங்கிக்கொண்ட உடன் அவள் கீழே இறங்கி சென்று விட்டாள் பொதுவாக பிடித்தவர்கள் கொடுத்த பொருள் இனிப்பை இமாலயன் ரேஞ்சுக்கு இன்க்ரீஸ் செய்யும். ஆனால் எனக்கு அருகில் அவள் இல்லாததால் அதிக சர்க்கரை உடைய காப்பியும் சற்று கசக்கத்தான் செய்தது.
காதலி போயிட்டா அடுத்து யாரு நண்பன் தானே? இந்த முறை எந்த பிரச்சனையும் இல்லாமல் phone னை எடுத்து ஹலோ என்றான். ஹாய் மச்சி எப்படி இருக்க என்றேன். நான் நல்லா இருக்கேன் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்றான்.
நான் உடனே நீங்களா? என்றேன் அதற்கு அவன் ஆமாம் இனி நீ என்பது நீங்கள் தானே? என்றான் இப்பொழுது தான் எனக்கு புரிந்தது அவன் அவளையும் சேர்த்து சொல்கிறான் என்று.
உடனே நான் இன்னைக்கு, இன்னைக்கு என்று இழுக்க ஆரம்பிச்சிட்டாண்டா இனி off பண்ணவே மாட்டான் என்றான். நான் வந்த கோவத்தை அடக்கி கொரியரில் அவனுக்கு அனுப்பிவிட்டு வராத சிரிப்பை வர வைத்து சிரித்தேன்.
சரி விடு மச்சி உன் கோபம் எனக்கு புரிகிறது இன்று நடந்ததை கூறும். என்று மன்னன் போல் கேட்க நான் அமைச்சர் போல அடக்கமாய் நடந்ததை கூறினேன்.
அப்புறம் சொல்லிட்டியா என்றான் நான் மெதுவாக இல்லை, இல்லை என்றேன். உடனே அவன் அவள் கொடுத்த காபி இங்கு என்னிடம் வழிந்து கொண்டிருக்கிறது அங்கு இது அப்படியே வார்த்தைகளாக வழிந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றான்.
மச்சி சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத பொண்ணுங்க மனசு வாடகை வீடு போல, எவன் எப்ப ரெண்டுக்கு வருவானே தெரியாது முந்திகிட்டா உனக்கு மோட்சம் இல்லையினா நீ போயிடுவ மோசம் என்று கூறிவிட்டு phone னை கட் செய்துவிட்டான்.
நான் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தேன். என்ன சாருக்கு சாப்பாடு மேலே வரணுமா என்றாள் அக்கா. அதான் வந்துவிட்டேனே என்றேன்.
இரவு உணவு இட்லி உடன் சிக்கன் குருமா ஆனால் எனக்குத்தான் அதில் ஈடுபாடு இல்லை. மனம் முழுவதும் நண்பன் கூறியவையே ஓடிக் கொண்டிருந்தன. இரண்டு மூன்று இட்லிகளோடு எழுந்ததாக ஞாபகம். எல்லோரும் ஏன் என்று கேட்க ஏதோ ஒன்றை சொல்லி சமாளித்து விட்டு அப்படியே போய் படுத்துக் கொண்டேன்.
மின்விசிறியின் செயற்கை காற்றையும் ஜனவரியின் கடும் குளிரையும் மீறி படுக்கையில் வெப்பம் என்னை வாட்டிக் கொண்டிருந்தது. நித்திரை தேவியோ நினைவுகள் மட்டும் போதும் இன்று உனக்கு கனவுகள் தேவை இல்லை என்றால்.
அப்பொழுதும் எனக்கு சித்திரையே அடி சித்திரையே ஏன் நித்திர போயிடுச்சு. இந்த பாழாப் போன காதல் என்ன பைத்தியம் ஆகிருச்சு என்று பாடத் தோன்றியது..
நேரம் நடுநிசியைய் எட்டியது நான் விழிமூடி தூக்கத்தை தேடினேன். இம்முறை நித்திரை தேவி என்மீது இரக்கம் கொண்டாள் நான் உறக்கம் கொண்டேன்.
அடுத்த நாள் காலை போகிப்பண்டிகை ஓடு அனைவருக்கும் விடிந்தது எல்லோரும் தங்கள் வீட்டில் பழையது எனக்கருதிய அனைத்தையும் நெருப்பிட்டு எரித்து போகியை கொண்டாடினர் எங்களுக்கும் அது சிறப்பாகவே அமைந்தது. அன்றும் விருந்து உபசரிப்பு நன்றாகவே இருந்தது. இரவு உணவு முடிந்தவுடன் வீட்டுப்பெண்கள் கதை பேச ஆரம்பித்துவிட்டார்கள் அவர்கள் பேச ஆரம்பித்துவிட்டாள் அதற்கு முடிவே கிடையாது. பக்கத்து வீட்டு மாமியின் ஆரம்பித்து எதிர் வீட்டு அக்கா, தூரத்து உறவுக்காரப் பெண் என்று நீண்டு  கொண்டே செல்லும்.
கூட்டத்தில் ஒருவர் அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சாண்டி என்பார் அது அப்படியே யாருக்கு, எப்ப, எத்தனை குழந்தை, என்று மற்றவர்களிடமிருந்து கேள்விகளாய் தொடரும். பொதுவாக பெண்களின் பேச்சில் பலருடைய வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிவிடும். இது சில நேரங்களில் கேட்பதற்கு இன்ட்ரஸ்ட் ஆக இருந்தாலும் பல நேரங்களில் அவர்களை திட்ட தோன்றும்.
இடையிடையே அவளையும் என்னையும் சேர்த்துவைத்து கிண்டல் செய்தார்கள். இருவருக்கும் வெட்கத்தைப் பாரேன் என்று அத்தையும் அவர்களோடு சேர்ந்துகொண்டார். எனக்கு அது உள்ளூர இனிப்பாய் இருந்தது அவளுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.
திடீரென்று அம்மா நாளைக்கு பொன்னியம்மன் கோயிலுக்கு போக வேண்டும் என்றார். அவருக்கு ஒரு வேண்டுதல் இருந்தது அது நிறைவேறும் வரை யாரிடமும் சொல்லக்கூடாது ரகசியமாக இருக்க வேண்டும் என்பது நம்பிக்கை. பெரும் பொங்கல் அன்று பொன்னியம்மன் கோவிலில் பூஜை விமர்சையாக நடைபெறும் அம்மனுக்கு சேலை அணிவித்து பெண்கள் வேண்டிக் கொள்வது வழக்கம். இரவு மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது அத்தை எல்லோரும் சென்று தூங்குங்கள் என்று கூறிவிட்டு அம்மாவை அழைத்துக்கொண்டு வாசலில் கோலம் போட சென்றுவிட்டார். இரவில் ஏன் கோலம் என்று கேட்பவர்களுக்கு ஒருவேளை காலை எழுவதற்கு லேட்டாகி விட்டாள் முன்னேற்பாடாக இது போன்ற சில வேலைகளை இரவே செய்து விடுவார்கள்.
காலையில் அனைவரும் சீக்கிரமாகவே எழுந்து குளித்துவிட்டு புத்தாடைகளை அணிந்து கொண்டோம். பெண்கள் ஒவ்வொருவராக கண்ணாடி முன் நின்று அலங்காரம் செய்து கொண்டு அவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் மீண்டும் மீண்டும் அதனை சரி பார்த்துக் கொண்டனர். பொதுவாக பெண்கள் எவ்வளவு அழகான ஆடைகளை அணிந்திருந்தாலும் அவர்களுடைய கவனம் மற்றவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளிளே இருக்கும். அடுத்த முறை அதை வாங்குவதற்கு கணவனின் சம்பளத்திலிருந்து ஒரு பட்ஜெட்டை ஒதுக்கி விடுவார்கள். குடும்ப வாழ்வில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் பெண்கள் தானே? நான் பெண்களைப் பற்றி பேசிக்கொண்டே பொங்கலை மறந்துவிட்டேன்.
வாங்க பொங்கல் வைக்கும் இடத்திற்கு செல்வோம் வீட்டின் முன்பு இரண்டு அடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன இரண்டு அடுப்புகளிலும் புது பானைகள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு பானையில் உப்பு கலந்த பச்சரிசிப் பொங்கலும் மற்றொரு பானையில் முந்திரி, திராட்சை, ஏலக்காய், வெள்ளம் போன்றவை கலந்த இனிப்பு பொங்கலும் தயாராகிக்கொண்டிருந்தன.
பொங்கல் நன்றாக பொங்கி பானையின் மேல் வழியும்போது அனைவரும் பொங்கலோ பொங்கல் என்றோம். அதன்பிறகு அனைவரும் பொங்கலை சாப்பிட்டோம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தோம். மதிய உணவை முடித்துவிட்டு அனைவரும் ஒரு குட்டித்தூக்கம் போட்டோம். மாலை எழுந்து அனைவரும் கோயிலுக்கு கிளம்பினோம். பொன்னியம்மன் கோவில் வீட்டிலிருந்து அரை மைல் தொலைவில் இருந்தது.
அனைவரும் நடந்தே செல்வதாக முடிவு செய்தோம். பெரும்பாலும் வெளியில் செல்லும் போதெல்லாம் அக்கா என் கையை பிடித்து அழைத்துச் செல்வதே வழக்கம். இம்முறை அவள் என் கையை பிடித்துக் கொண்டாள் இருவரும் சாலையில் நடந்து கொண்டிருந்தோம் என் மனம் பூஞ்சோலையில் பறந்து கொண்டிருந்தது. வழியில் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க ஒரு கடையில் நின்றோம். நாங்கள் சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்தோம்.
அப்பொழுதும் அவள் என் கைகளை விடாமல். பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள். சாலையின் ஓரம் ஒரு இணை பிரியா ஜோடி என்று அக்கா கிண்டல் செய்ய சுத்தி போட வேணாமா கண்ணு பட்டு போச்சு இந்த ஜோடி சூப்பருன்னு ஊருக்குள்ள பேச்சு. வயலுக்கு போற சனம் எல்லாம் பச்ச நெல்லாக நம்ம பேர நடவு செய்த யா. சந்தையில கூடுர கூட்டம் எல்லாம் துட்டு இல்லாம நம்ம சேதி வாங்கி போகுதய்யா என்ற பாடல் அந்த கடையில் இருந்த ரேடியோவில் பாடிக் கொண்டிருந்தது.
உடனே அக்கா what a timing song என்றாள். வெட்கத்தில் அவள் கண்ணங்கள் சிவந்து இருக்க வேண்டும். அது அவளுடைய கை அசைவிலும் அழுத்தத்திலும் தெரிந்தது. தொடரும், Edit box, 1 of,  2

3 comments:

  1. நீங்கள் இந்த பதிவைப் படித்ததற்கு நன்றி உங்கள் மின்னஞ்சல் முகவரி எனக்கு அன்னோன் என வருகிறது அடுத்த முறை உங்கள் பெயருடன் ஆதரவை தெரிவிக்க விரும்புகிறேன் நீங்கள் ஹீரோ பெயரை கேட்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் காத்திருங்கள்

    ReplyDelete
  2. நண்பா நீ வேற லெவல் தான் போவேன் என்னம்மா எழுதுற எப்படிப்பா சொல்லிக் கொடுத்தால் நாங்களும் கத்துக்கும் ரொம்ப சந்தோஷம் தொடரட்டும் உன் பயணம் வாழ்க வளர்க

    ReplyDelete