Monday, May 4, 2020

காதல் என்னும் அத்தியாயம் 3:

ஊருக்கு போறோம் என்ற உற்சாக டானிக் என் உடல் முழுவதும் ஹார்மோன் ஆய் பறவை அசட்டுத்தனமாய் நான் கத்திவிட்டேன்.
அது பக்கத்தில் படித்துக்கொண்டிருந்த என் நண்பனை disturb செய்துவிட்டது. உடனே அவன் டென்ஷனாக கத்தினான் அவன் கத்தலுக்கும் காரணம் இருந்தது.
அப்பொழுது அரையாண்டு தேர்வு நடைபெற்று கொண்டிருந்தது அதற்குத்தான் அவன் அவ்வளவு sincere  ராக படித்துக்கொண்டிருந்தான்.
உடனே அவனிடம் சாரி கேட்டுவிட்டு நடந்ததைக் கூறினேன். அதற்கு சரி, சரி மூடிக்கிட்டு படி நாளைக்கு exam எழுதணும் இல்ல என்று கூறிவிட்டு அவன் வேலையை தொடங்கி விட்டான்.
நானும் பரீட்சைக்கு படிக்க தொடங்கினேன். என்னடா இவன் படிக்கிறேன், பரிச்சை எழுதுகிறேன் என்றுகூறிவிட்டு இவனை பற்றியும் இவன் பள்ளியைப் பற்றியும் எதுவும் கூறவில்லையே என்று நீங்கள் think செய்வது எனக்கு தெரிகிறது.
முதலில் என்னை பற்றி; நான் இரண்டாம் வகுப்பு வரை mahalakshmi matric higher secondary School ஹில் படித்துக்கொண்டிருந்தேன்.
அந்தப் பள்ளியில் சில நேரங்களில் வகுப்புகள் மரத்தடியில் நடைபெறும். எங்கள் பள்ளியில் ஒரு சிறிய பிளாக்போர்டு இருக்கும் அந்த போர்டை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று பயன்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அன்று அந்த போர்டு மரத்தடிக்கு கொண்டுவரப்பட்டது அந்த வகுப்பு ஆசிரியர் வருவதற்கு சற்று தாமதம் ஆனதால் நானும் என் வகுப்புத் தோழர்களும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தோம்.
அப்பொழுது ஒருவன் தெரியாமல் அந்த போர்டின் மீது மோதி விட்டான் உடனே அந்த போர்டு சரிந்து என் மேல் விழுந்தது. அதனால் என் தலையில் பலமாக அடிபட்டது உடனே ஹாஸ்பிடலுக்கு சென்று ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டேன்.
அடிக்கடி தலைவலி மட்டும் இருந்து வந்தது நாளாக நாளாக பார்வை மங்குவது ஆக தோன்றியது. என்னால் போர்டில் எழுதி போடுவதை பார்த்து எழுதமுடியவில்லை.
இதைப்பற்றி என் பேரன்ட்ஸ் இடம் கூறினேன்மீண்டும் டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள் என்னை பரிசோதித்த டாக்டர் நரம்பு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் பார்வை குறைந்து கொண்டு வருவதாகவும் கூறினார்.
ட்ரீட்மெண்ட் ஐப் பற்றி என் பெற்றோர் கேட்டபோது கொஞ்சம் வயதான பிறகு பார்த்துக்கொள்ளலாம் ஆனால் என்னால் 100% கேரண்டீ கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்.
இதற்கு மேல் அந்தப் பள்ளியில் என்னால் தொடர முடியாது என்பதை அறிந்து கொண்ட எனது வகுப்பு ஆசிரியர்கள்சென்னை பூந்தமல்லியில் பார்வையற்றோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளதாகவும் என்னை அங்கு சேர்த்து விட்டால் நான் நன்றாக படித்து நான் நினைத்ததை achieve பண்ண முடியும் என்று கூறினார்கள்.
ஆசிரியர்களின் அறிவுரையின்படி அடுத்தநாள்பூந்தமல்லிக்கு சென்றோம் எனது ஆசிரியர் இருவர் என் பெற்றோருடன் வந்தனர் அங்கிருந்த ஆசிரியர்களிடம் என்னைப்பற்றிகூறியவுடன் அவர்கள் மகிழ்ச்சியோடு என்னிடம் சில கேள்விகளை கேட்டு விட்டு இரண்டாம் வகுப்பில் தொடரலாம் என்று கூறினர்.
அங்கிருந்த ஆசிரியர்கள் எனது பேரன் சுக்கு அறிவுரை கூறி என்னை ஹாஸ்டலில் விட்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். பள்ளியில் இருந்து என் வீடு கொஞ்சம் பக்கம் இருந்ததால் வார வாரம் நான் வீட்டிற்கு சென்று வந்து கொண்டிருந்தேன்இவ்வாறு நான் வீட்டிற்கு சென்று வருவது பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்தது.
பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளி சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது இப்பள்ளியில் நான் படிக்கும் பொழுதுபள்ளி வளாகத்தில் பார்வையற்றோர் தொழில் பயிற்சி மையம், பார்வையற்றோருக்கான பெண்கள் மறுவாழ்வு இல்லம், வட்டார பிரெய்லி அச்சகம், இடைநிலை ஆசிரியர் பயிற்சி மையம், பார்வையற்றோருக்கு கற்பிக்கும் ஆசிரியர் பட்டய பயிற்சி மையம் போன்ற அரசுசார் நிறுவன மையங்கள் செயல்பட்டு வந்தன.
இப்பொழுது அப்பள்ளியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டதாக நண்பர்கள் கூற கேள்விப்பட்டேன். நான் படிக்கும் பொழுது விடுதியும் பள்ளியும் வெவ்வேறு இடத்தில் இருக்கும் ஆனால் இப்பொழுது விடுதி பள்ளிக்கு அருகிலேயே கட்டப் பட்டு விட்டதாகவும் கேள்விப்பட்டேன்.
நான் ஒருமுறை பள்ளிக்குச் சென்றபோது அங்கு மாணவர்கள் விளையாடுவதற்கு சிறிய பூங்கா ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. Ok ok வரலாறு நீண்டுகொண்டே செல்கிறது இப்பொழுது தேர்வு கதைக்கு வந்துவிடுவோம் தேர்வு வெற்றிகரமாக முடிந்தது நான் ஓரளவு நன்றாக எழுதி இருந்தேன். என் நண்பன் வழக்கம்போல நன்றாக எழுதி இருப்பான் நான் காலையிலேயே என் வீட்டிற்கு போன் செய்து வர சொல்லி இருந்ததால் மதியமே என்னை அழைத்து செல்ல என்னுடைய அக்கா வந்து இருந்தாள்.
என் நண்பன் இரவு தான் ஊருக்கு செல்வேன் என்று முன்பே என்னிடம் கூறி இருந்தான். அவனிடம் மச்சி ஹேப்பி பொங்கல் டா வீட்டுக்கு கிளம்புறேன் என்றேன். ஓகே மச்சி சேம் டு யு டா ஆளுகிட்ட ஓவரா பொங்கி டாத உடம்பு தாங்காது டைம் பார்த்து லவ்வ சொல்லிடு என்றான் நான் ஓகே மச்சி என்று கூறிவிட்டு கிளம்பினேன். தொடரும்

2 comments:

  1. அருமை அருமை அருமை இப்படி நீங்கள் நல்லதொரு படைப்பு படைப்பிரிவுகள் என்று எதிர்பார்க்கவில்லை

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி உங்கள் ஆதரவு இருந்தால் தொடர்ந்து பல படைப்புகளை தந்து கொண்டே இருப்பேன் நன்றி

      Delete