இரவு உணவும், இனிய நினைவும், எதிர்பார்த்த கனவும் என்னை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தியது. வாழ்க்கை என்னும் கடலை சேர காதல் என்னும் கப்பலில் பயணம் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.
கைப்பேசியில் அவள் வாய்ப் பேச்சை கேட்க காத்திருந்த நாட்களெல்லாம் சொல்ல நேரம் காணாது! அந்த சொகம் எப்போதும் மாறாது. இப்படியே நாள்தோறும் என் பேச்சை அவள் கேட்க, அவள் பேச்சை நான் கேட்க என்று நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
இருவருக்கும் ஆசைகள் பேராசைகளாக, கனவுகள் பல, கற்பனைகளாக வளர்ந்து கொண்டிருந்தன. காதலிப்பவர்கள் phone னில் மணிக்கணக்காய் பேசுவதை பார்த்து உடன் இருப்பவர்கள் அப்படி என்னதான் ரகசியம் பேசுவார்களோ? என்று சலித்துக் கொள்வதும் உண்டு.
பொதுவாக, love பண்றவங்க dictionary இல் அப்புறம், சொல்லு, பேசு, நீ பேசு, என்ன பேசுறது, என்கிட்ட மட்டும் உனக்கு என்ன பேசறதுன்னு தெரியாது, உனக்கு மட்டும், நல்லா இருக்கியா, சாப்பிட்டியா, வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா, என்ன பண்ணிக்கிட்டு இருந்த, ஏன் போன் எடுக்கல, என்ன விட உனக்கு அப்படி என்ன முக்கியமான வேலை போன்ற சில வார்த்தைகளும், சில வாக்கியங்களும் ad செய்யப்பட்டிருக்கும்.
இதனைத் தாண்டி அவர்களுடைய மொத்த இரகசியத்தை நம்மால் அறிய முடியாது. ஆனால், முத்த ரகசியம் அனைவரும் அறிந்ததே. அதான் சினிமாவுல கூட காட்டுகிறார்களே.
சில பாக்கியசாலி களுக்கு அது கேட்டவுடன் கிடைத்துவிடும். சில அதிர்ஷ்டசாலி களுக்கு அது கேட்காமலேயே கிடைத்துவிடும். என்னைப் போன்ற துரதிர்ஷ்டசாலி களுக்கு அது திருமணத்திற்கு பிறகு என மறுக்கப்படும்.
சில நேரங்களில் முத்தம் மொத்த பேலன்ஸ் தீரும் வரையிலும் கிடைக்காது. கேட்டது கேட்டவுடன் கிடைத்துவிட்டால் கேட்பதில் தான் என்ன சுகம்? கேட்டது கிடைப்பதில் தான் என்ன சுகம்?. தாமதமாய் கிடைப்பதில் தான் தாராளம் ஏராளமாய் இருக்கும்.
அவளிடம் ஆயுள் கைதியான நான் இடையிடையே வந்த நண்பனின் அறிவுரைகளை அலட்சிய படுத்தினேன். சுதந்திரமான நட்பு சிறையில் இருந்து விடுபட்டு சுகமான காதல் சிறையில் அடைப்பட்டதால் பாதை தடம் மாறி, படிப்பு உருமாறி, மனம் ஒரு மாரி ஆனது.
அதன் விளைவு பத்தாம் வகுப்பு result இல் தெரிந்தது. நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. pass ஆயிட்டேன்; ஆனா 54 சதவீதம் மார்க் மட்டுமே எடுக்க முடிந்தது.
நண்பன் பள்ளியில் இரண்டாவது மாணவனாகத் தேர்ச்சி பெற்றான். அவனுக்கு முதல் மாணவனாகத் தேர்ச்சி பெறவில்லை என்ற வருத்தம். ஆனால், எனக்கு அந்த வருத்தம் இல்லை. ஏனென்றால், அவன் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று விடுவான் என்று எனக்கு தெரியும்.
நான் எதிர்பார்த்த விஷயங்கள் நடைபெறவில்லை என்றால் உடனே டல்லாகிவிடுவேன். விளையாட்டுல தோத்துட்டா கூட என் மனம் அதை ஏற்காது. அந்த நேரங்களில் நண்பனுடைய advice ஆறுதலையும் தன்னம்பிக்கையையும் தரும்.
பதினொன்றாம் வகுப்பு முழுவதும் என்னை என் போக்கில் விட்டுவிட்டான். அந்த ஆண்டின் இறுதியில் என்னை அழைத்து அவன் செய்த advice வழக்கமானதாக தெரியவில்லை. மாறாக வாழ்க்கையின் யதார்த்தத்தை எனக்கு புரிய வைத்தது. ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை பெற முடியும் என்பது முதுமொழி. ஈன்றதை இழந்துவிடாமல் இருக்க இயன்றதை செய்ய வேண்டும் என்பது புதுமொழி.
வாழ்க்கை என்பது பல பகுதிகளை உள்ளடக்கியது. நாம் அனைத்திலும் சரிநிகர் கவனம் செலுத்த வேண்டும். அதில் பாரபட்சம் காட்டினாள் பாதை மாறிவிடும். கடலெனும் வாழ்க்கைப் பயணத்தில் காதல் என்னும் கப்பலுக்கு முக்கியமானவை இரண்டு.
ஒன்று கடலில் கப்பலை தாங்கி நிற்கும் நங்கூரம். மற்றொன்று பயணத்தில் வழிகாட்டும் கலங்கரை விளக்கம். உன்னைப் பொறுத்தவரை நீ நங்கூரம், அவள் கலங்கரை விளக்கம். என்னைப்பொறுத்தவரை நம்மைப் போன்று middle class குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு படிப்பு நங்கூரம், அதன்மூலம் கிடைக்கும் வேலை கலங்கரை விளக்கம் என்று கடைசியாய் அவன் கூறிய வார்த்தைகள் எனக்குள் தன்னம்பிக்கை விதைகளை விதைத்தது.
அன்று அவன் விதைத்த விதை இன்று என் கதையை நானே எழுதும் அளவிற்கு மரமாய் என்னை வளர்த்து இருக்கிறது. நான் பன்னிரண்டாம் வகுப்பில் 82 சதவீத மதிப்பெண்ணுடன் ஐந்தாவது மாணவனாக தேர்ச்சி பெற்றேன். எல்லோரும் எதிர்பார்த்ததை போல என் நண்பன் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றான். எல்லோருடைய பாராட்டும் நண்பனுக்கு கிடைக்க, நண்பனுடைய பாராட்டு எனக்கு கிடைத்தது.
அதன் பிறகு மனதில் பாரத்தோடும், கண்ணில் ஈரத்தோடும் நண்பர்கள் கூட்டம் பிரிந்தது. கோடை விடுமுறையில் காதல் பயணம் காலம், நேரம் இன்றி தொடர்ந்தது. ஒரு நாள் அவள் என்னிடம் கேட்ட கேள்வி ஏற்கனவே பலர் என்னிடமும் என் பெற்றோரிடமும் கேட்டது.
அப்போதெல்லாம் தயக்கமின்றி பதிலளித்த எனக்கு திடீரென்று அவள் கேட்டவுடன் ஒரு அதிர்ச்சி. சொந்தத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டா குழந்தை ஊனமாகப் பிறக்குமா? என்பதுதான் அவளுடைய கேள்வி.
ஏன் திடீர்னு இந்த கேள்வி என்று கேட்டேன். ஒன்னுமில்ல அம்மாகிட்ட ஒருத்தவங்க பேசிக்கிட்டு இருந்தாங்க. அவங்கதான் இதைப்பத்தி சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அதனாலதான் கேட்டேன்.
எல்லோருடைய குழந்தைகளும் அப்படிப் பிறப்பதில்லை. சிலருடைய குழந்தைகள் அவ்வாறு பிறக்கின்றனர். என்று விளக்கினேன்.
இதனைப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது உண்மைதான் ரத்த சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தை ஏதோ ஒரு வகை ஊனத்தோடு பிறக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. எல்லோருடைய குழந்தையும் அப்படி தான் பிறக்கும் என்று ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. என்னுடைய பெற்றோரைப் போன்ற துரதிர்ஷ்டசாலி களுக்கு அவ்வாறு நடக்கலாம்.
அதன் பிறகு எப்பொழுதெல்லாம் இருவரும் பேசும்போதெல்லாம் இதைப்பற்றிய பேச்சாகவே இருந்தது. என்னால் முடிந்தவரை அவளுக்கு புரியவைக்க முயற்சி செய்தேன். அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது. இதைப்பற்றி என் பெற்றோரிடமும் பேசினேன். முதலில் அவர்களுக்கு அதிர்ச்சி ஏனென்றால் முதன்முதலில் எங்கள் காதல் விஷயத்தை அவர்கள் கேள்வி படுகிறார்கள். அனைத்தையும் கேட்டு முடித்துவிட்டு அவர்கள் கூறியது இதற்குத்தான் தாத்தா கேட்கும் பொழுதே நாங்கள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினோம். இப்பொழுதே இந்த விஷயத்திலிருந்து வெளி வர முயற்சி செய் என்று கூறி விட்டார்கள்.
இந்த சோகத்திலிருந்து நான் வெளிவருவதற்குள் கல்லூரியில் சேரும் நாள் வந்தது. நானும் என் நண்பனும் சென்னையில் உள்ள ஒரு பிரபலமான கல்லூரியில் application போட்டிருந்தோம். இருவருக்கும் ஒரே department கிடைத்தது. கல்லூரியில் சேர்ந்தவுடன் நண்பனிடம் இதைப்பற்றி கூறினேன்.
கடைசியாக ஒரு முறை அவளிடம் பேசி பார் என்றான். நான் அவளுக்கு கால் செய்து பேசினேன். எனக்கு எல்லாமே புரியுது எனக்கு நீ இப்படி இருக்கிறது பிரச்சனை இல்லை. ஆனால், நம்ம குழந்தை ஊனமா பிறந்தா அதை ஏத்துக்கிற பக்குவம் உனக்கு இருக்கலாம். ஆனால், எனக்கு இல்லை. என்னை மன்னித்துவிடு எனக்கு வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை. என்று கூறிவிட்டு போனை கட் செய்து விட்டாள்.
என்னால் முடிந்தவரை அழுதேன். உன் சோகம் தீரும் வரை அழு. அழுகை ஒன்றுதான் உன் வலிக்கு நிவாரணம். என்று கூறி என் அழுகைக்கும் ஆதரவாய் நண்பன் இருந்தான்.
நாட்கள் கடந்தன என்னிடம் எந்த மாற்றமும் இல்லை. மறுபடியும் நண்பன் என்னிடம் பேசினான். உனக்கு பிடித்த ஒரு விஷயத்தில் முழு கவனத்தையும் செலுத்து. அது ஒன்றே நீ இயல்பு நிலைக்கு திரும்ப ஒரே வழி.
உனக்கு cricket ரொம்ப பிடிக்கும் இல்ல? college time முடிந்தவுடன் cricket விளையாடு. நானும் உன்னோடு வந்து விளையாடுகிறேன். அது உனக்கு practice சுக்கும் உதவும். டீம்ல நல்லா perform பண்ணலாம் என்றான்.
எனக்கும் அது நல்ல யோசனையாக தோன்றியது. அதற்கு கிடைத்த பரிசு நான் இப்பொழுது மாவட்ட அளவிலான ஒரு டீமுக்கு கேப்டனாக இருக்கிறேன்.
நான் அந்த சோகத்தில் இருந்து மீண்டு வர நீண்ட நாள் ஆனது. அதன்பிறகு என் வாழ்க்கையின் நங்கூரமாக படிப்பு மாறியது. வழிகாட்டியான கலங்கரை விளக்கமாக நண்பன் இன்று வரை தொடர்கிறான். இதற்கு மேலும் தொடர்வான்.
அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்வது ஒன்று மட்டும்தான் நமக்கு நாம் விரும்பிய ஒன்று கிடைக்கவில்லை என்றாள், அதைவிட best ஆன ஒன்று கிடைக்கப் போகிறது என்று அர்த்தம். so எதற்கும் கவலை வேண்டாம். be happy. முற்றும்.
இதுவரை இந்த பயணத்தில் என்னோடு தொடர்ந்து பயணித்த வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி. சிலருடைய நலன் கருதி யாருடைய பெயரும் இப்பயணத்தில் இடம் பெறவில்லை.., Edit box, 1 of, 2, Edit, box